
இதோ உன் கைகளில் வாழ்க்கை உண்டு.
இருக்கும் போது அதை எதிர்க்கொண்டு
இனிதே முன்னேறு, உருண்டு, புரண்டு
இவ்வுலகம் வலம் வரும் உண்டோடு !
இல்லை இனி பழைய சோதனை
இன்று நடக்கும் புதுப் போதனை
இன்பம் கொள்ளும் வாழ்வினை
இணைத்துவிடும் உன் சாதனை!
இனிமை என்னும் படகில் நீ இருக்க
இருக்கைகளும் துடுப்பாயிருக்க
இனி வரும் வேலை எல்லாம் இனிக்க
இறுக்கம் கொண்ட முகத்தை போக்க
இறக்கும் வரை செய்துவிடு ஈகை
இருக்கும் வரை கிடைக்கும் வெற்றியின்
மாலை
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...